Friday, April 02, 2010

என்ன ஆயிற்று?

கல்யாணத்துக்கு முன்
'கவிதை படிப்பாயா'
என்று கேட்டுக் கொண்டிருந்த நீ
இப்போது
'குழந்தைக்கு இந்தப் பள்ளி பற்றி விசாரித்தாயா'
என்று மூன்றாம் முறையாக கேட்கிறாய்

கவிதையை விழுங்கிய பள்ளி
என்று சற்று கோவம் வந்தது